Samugam

    • Sample Page
Illustration of a bird flying.
  • வங்கதேச வாக்குச்சாவடியில் மோதல் – பிஎன்பி நிர்வாகி உயிரிழப்பு

    வங்கதேச வாக்குச்சாவடியில் மோதல் – பிஎன்பி நிர்வாகி உயிரிழப்பு

    வங்கதேசத்தின் குல்னா சாதார் பகுதியில் ஆலியா மதரசா வாக்குச்சாவடியில் இரு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் வங்கதேச தேசியவாத கட்சியை (பிஎன்பி) சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். பிஎன்பி கட்சியின் குல்னா மெட்ரோபாலிட்டன் பகுதியின் முன்னாள் செயலாளர் மொஹிபுஸாமன் கொச்சி தாக்கப்பட்டதை அடுத்து அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அக்கட்சியின் உள்ளூர் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை (12) காலை இரு குழுக்களிடையே விவாதம் ஏற்பட்டதாகவும் அப்போது, மொஹிபுஸாமன் கொச்சிக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட…

    February 12, 2026
  • பெண் கைதியால் வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனை; பொலிஸார் ஷாக்

    பெண் கைதியால் வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனை; பொலிஸார் ஷாக்

    கல்கிசை, பிரிவேனா வீதியிலுள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனையில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருள், 800,000 பணம் மற்றும் 30 போலி எண் தகடுகளை கல்கிசை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் சந்தேக நபர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையிலேயே இப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ஒரு துப்பாக்கி, வெடிமருந்துகள், ஒரு மின்னணு தராசு, இரண்டு தங்க நெக்லஸ்கள், ஒரு தங்க வளையல், ஒரு…

    February 12, 2026
  • ஒரே ஒரு ‘செல்பி’; ரஷ்ய பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பிய யானை

    ஒரே ஒரு ‘செல்பி’; ரஷ்ய பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பிய யானை

    கதிர்காமம் – புத்தல வீதியில் காட்டு யானையை நிழற்படம் எடுக்க முயன்ற ரஷ்யப் பெண் ஒருவர், அந்த யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்துள்ளார். வீதியோரம் நின்ற யானையைப் பார்ப்பதற்காக வாகனத்திலிருந்து இறங்கிய குறித்த பெண், அந்த யானைக்கு அருகில் சென்று நிழற்படம் எடுக்க முயன்றபோது யானை அவரைத் தாக்கியுள்ளது. இதன்போது பலத்த காயமடைந்து கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் அவருடன் சென்ற கணவர் காயமின்றி தப்பியுள்ளார்.…

    February 12, 2026
  • யாழ் அல்லப்பிட்டி இளைஞன் மரணம்; வீதியில் சவப்​பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்

    யாழ் அல்லப்பிட்டி இளைஞன் மரணம்; வீதியில் சவப்​பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்

    யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (12) அன்று இடம்பெற்றது. அதன் பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சவப்​பெட்டியுடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து “பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது” என கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம்…

    February 12, 2026
  • கனடாவில் பயங்கரம்; பாடசாலை துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி

    கனடாவில் பயங்கரம்; பாடசாலை துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் உயர்நிலைப் பாடசாலையில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் சந்தேகநபர் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டம்ப்ளர் ரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள குறித்த பாடசாலைக்குள் நேற்று மதியம் புகுந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் அவசரகால எச்சரிக்கை…

    February 11, 2026
  • யாழில் இளைஞனின் தலையை துளைத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு

    யாழில் இளைஞனின் தலையை துளைத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு

    யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், துப்பாக்கிச் சன்னம் தலையைத் துளைத்துச் சென்றமையே மரணத்திற்கு நேரடி காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் (17 வயது) என்ற இளைஞன்…

    February 11, 2026
  • விமான நிலையத்தில் யாழ் ஆவா குழு உறுப்பினர்கள் கைது ; திடுக்கிடும் தகவல்!

    விமான நிலையத்தில் யாழ் ஆவா குழு உறுப்பினர்கள் கைது ;   திடுக்கிடும் தகவல்!

    கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் இரண்டு பேர் விசாரணைகளுக்காக 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கு ஆட்களை விநியோகிக்கும் பகிர் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த சம்பவத்தின் பின்னர் நாட்டை விட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற குறித்த சந்தேகநபர்கள், அண்மையில் மீண்டும் இலங்கைக்குத் திரும்பியபோது,…

    February 10, 2026
  • யாழில் அதிகாலையில் பயங்கரம்; பொலிஸாரின் துப்பாக்கிசூட்டில் இளைஞன் பலி

    யாழில் அதிகாலையில் பயங்கரம்; பொலிஸாரின் துப்பாக்கிசூட்டில் இளைஞன் பலி

    யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த சிற்றூர்தியின் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில், குறித்த சிற்றூர்தியின் சாரதியே உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்த இளைஞனின் உடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி வழியாக இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த வாகனம் ஒன்றை நிறுத்துமாறு காவல்துறையினர் கட்டளையிட்டுள்ளனர்.எனினும், கட்டளையை மீறி குறித்த வாகனம் மண்டைத்தீவு நோக்கி பயணித்துள்ளது. இதன்போது, மண்டைத்தீவு பகுதியில் கடமையில்…

    February 10, 2026
  • யாழ் மருதனார்மட சந்தைக்கு துப்பாகியுடன் வந்த மர்ம நபரால் பரபரப்பு

    யாழ் மருதனார்மட சந்தைக்கு துப்பாகியுடன் வந்த மர்ம நபரால் பரபரப்பு

    யாழ்ப்பாணம், மருதனார்மட சந்தைக்கு இன்று (10) காலை 06.03 மணிக்கு துப்பாக்கிகளுடன் வந்த மர்மநபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த நபர் பை ஒன்றினுள் ர-56 ரக துப்பாக்கியை வைத்துக்கொண்டு மருதனார்மடம் சந்தைக்கு இன்று காலை வந்துள்ளார். இதன்போது அவரது இடுப்புக்குள்ளும் கைத்துப்பாக்கி போன்ற ஒரு அமைப்பு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வருகை தந்த நபர் தனிநபர் ஒருவரது பெயரை விசாரித்துவிட்டு, வட்டிக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என அங்கு விசாரித்ததாக கூறப்படுகிறது. கையில் கொண்டு வந்த…

    February 10, 2026
  • யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி

    யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி

    வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று (09) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற வீதியால் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியோரம் நின்ற பனைமீது மோதி விபத்துகுள்ளாகியுள்ளது. இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரது சடலம் தற்போது காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.…

    February 9, 2026
1 2 3 … 347
Next Page→

Samugam

Proudly powered by WordPress